'பாஜக ஆசி யாத்திரை கரோனா 3-ம் அலைக்கு வழிவகுக்கும்'

பாஜகவினரின் ஆசி யாத்திரை கரோனா 3-ஆம் அலைக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார். 
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)

பாஜகவினரின் ஆசி யாத்திரை கரோனா 3-ஆம் அலைக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் ஆசி யாத்திரை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பல்வேறு நகரங்களில் யாத்திரை மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத், பாஜகவின் இந்த செயல் மக்களிடையே கரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். 

மேலும், பெருந்தொற்று காலத்தில் பாஜகவினர் மேற்கொள்ளும் இந்த யாத்திரை கரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com