மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

'பாஜக ஆசி யாத்திரை கரோனா 3-ம் அலைக்கு வழிவகுக்கும்'

பாஜகவினரின் ஆசி யாத்திரை கரோனா 3-ஆம் அலைக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார். 

News image
சஞ்சய் ரெளத் (கோப்புப் படம்)
Updated On :18 ஆகஸ்ட் 2021, 10:17 am

DIN

பாஜகவினரின் ஆசி யாத்திரை கரோனா 3-ஆம் அலைக்கு வழிவகுக்கும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் ஆசி யாத்திரை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பல்வேறு நகரங்களில் யாத்திரை மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத், பாஜகவின் இந்த செயல் மக்களிடையே கரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். 

மேலும், பெருந்தொற்று காலத்தில் பாஜகவினர் மேற்கொள்ளும் இந்த யாத்திரை கரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.