உச்ச நீதிமன்ற கொலிஜியம் சில நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹாவின் பணி உபசார விழாவில் பேசிய ரமணா, "நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறை மிகவும் மதிப்புமிக்கது கண்ணியமிக்கது. ஊடக நண்பர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். திறமை வாய்ந்த நீதிபதிகளின் எதிர்காலம் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டதால் சிதைந்துள்ளது.
இது துரதிருஷ்டவசமானது. இதனால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். பெரும்பான்மையான மூத்த பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் முதிர்ச்சியுடன் இதில் பொறுப்புடன் நடந்து கொண்டதை பாராட்டுகிறேன்" என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக செய்தி வெளியாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



