ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.
தலிபான்கள் சுட்டுக் கொன்றாலும் கோயிலில் சேவையாற்றுவதை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளுடன் போரிட்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தலைநகரான காபூலில் உள்ள ரத்தன் நாத் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் என்பவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா செல்ல போதிய ஏற்பாடுகள் செய்து கொடுத்தாலும், முன்னோர்கள் சேவையாற்றிய கோயிலை விட்டு வெளியேறமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சில ஹிந்து மதத்தினர் ஆப்கனை விட்டு வெளியேற அழைத்தபோது அவர் இது தொடர்பாக பேசியதாவது, ''பலர் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான பயணம் மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறுகின்றனர்.
ஆனால் எனது முன்னோர்கள் ரத்தன் நாத் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளனர். நான் அதை விட்டுச்செல்ல முடியாது. தலிபான்கள் கொன்றாலும் எனது சேவையிலிருந்து பின்வாங்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,57,923 வாக்காளா்கள்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

