மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   

News image
தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி
Updated On :18 ஆகஸ்ட் 2021, 12:02 pm

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   

தலிபான்கள் சுட்டுக் கொன்றாலும் கோயிலில் சேவையாற்றுவதை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கப் படைகளுடன் போரிட்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இதனால் ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் தலைநகரான காபூலில் உள்ள ரத்தன் நாத் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் என்பவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்தியா செல்ல போதிய ஏற்பாடுகள் செய்து கொடுத்தாலும், முன்னோர்கள் சேவையாற்றிய கோயிலை விட்டு வெளியேறமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். 

சில ஹிந்து மதத்தினர் ஆப்கனை விட்டு வெளியேற அழைத்தபோது அவர் இது தொடர்பாக பேசியதாவது, ''பலர் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான பயணம் மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறுகின்றனர்.

ஆனால் எனது முன்னோர்கள் ரத்தன் நாத் கோயிலில் நூறு  ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளனர். நான் அதை விட்டுச்செல்ல முடியாது. தலிபான்கள் கொன்றாலும் எனது சேவையிலிருந்து பின்வாங்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.