எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குஜராத்தில் செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

குஜராத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 9:50 am

DIN


குஜராத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குஜராத்தில் தற்போது 160 பேர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,079 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கெனவே 9 முதல் 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.