குஜராத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குஜராத்தில் தற்போது 160 பேர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,079 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அனுமதி: பிகார் முதல்வர்
இந்த நிலையில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கெனவே 9 முதல் 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.