எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அனுமதி: பிகார் முதல்வர்

பிகாரில் கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

News image
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
Updated On :25 ஆகஸ்ட் 2021, 9:38 am

DIN

பிகாரில் கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா குறைந்து வருகிறது.

பிகாரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவுத்துள்ளார். 

அதன்படி கோயில்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றை திறக்கவும் முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.