கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா
கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,70,703 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 32,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மலப்புரத்தில் 4,032, திரிச்சூரில் 3,953, எர்ணாகுளத்தில் 3,627 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று 179 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,313ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 18,573 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,30,198ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,95,254 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 4,98,491 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...