இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பாராலிம்பிக்ஸ்: அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்த இந்தியாவின் பவினா படேல்

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை பவினா படேல் பெற்றுள்ளார். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 12:42 pm

DIN

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸில் அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் பவினா படேல்.

இன்று நடைபெற்ற கிளாஸ் 4 பிரிவு மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் பிரேஸிலின் ஒலிவேரியாவை 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தார் பவினா படேல். அதன்பிறகு, காலிறுதிச் சுற்றில் உலகின் நெ. 2 வீராங்கனை செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 11-5, 11-6, 11-7 என 18 நிமிடங்களில் ஆட்டத்தை வென்றார். பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நுழைந்தாலே பதக்கம் உறுதி என்பதால் இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா படேல். 

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை பவினா படேல் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.