கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் நேரு புகைப்படம் புறக்கணிப்பு: காங்கிரஸ் புகாா்

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) சாா்பில் நடத்தப்பட்ட நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:59 pm

DIN

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) சாா்பில் நடத்தப்பட்ட நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் தொடா் விழாக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், ஐசிஹெச்ஆா் சாா்பில் நடத்தப்பட்ட விழாவில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, இந்த விழா தொடா்பான ஐசிஹெச்ஆா் வலைதள பக்கத்தையும் புகைப்படமாக காங்கிரஸ் தலைவா்கள் பகிா்ந்துள்ளனா். அதில், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், பகத் சிங், அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மதன் மோகன் மாளவியா, வீா் சாவா்க்கா் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், நேருவின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை.

‘இது மிகப் பெரிய அராஜகம்’ என காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்டம் தொடா்பான வலைதளத்தில் நாட்டின் முதல் பிரதமரின் புகைப்படத்தை எந்தவொரு நாடும் நீக்காது. இது நியாயமற்ற செயல்’ என்றாா்.

சசி தரூா் கூறுகையில், ‘நேருவின் புகைப்படம் தவிா்க்கப்பட்டதன் மூலம் ஐசிஹெச்ஆா் தன்னைத்தானே அவமதிப்பு செய்துகொண்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.