/

முழு ஊரடங்கு எதிரொலி: கேரளத்தில் குறைந்தது கரோனா

கேரளத்தில் முழு ஊரடங்கு எதிரொலி காரணமாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று திங்கள் கிழமை (ஆக.30) குறைந்துள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 4:36 pm

DIN

கேரளத்தில் முழு ஊரடங்கு எதிரொலி காரணமாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று திங்கள் கிழமை (ஆக.30) குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,622 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 132 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 19,622 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கடந்த 24 மணி நேரத்தில் 22,563 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,96,317-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 132 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 20,673-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 2,09,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.