இலவச திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
இலவச திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

பொதுக் கணக்குக் குழு அமைக்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டு விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பொது கணக்குக் குழுத் தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

அரசின் நிதி வீணாக செலவு செய்யப்படுவதைத் தடுப்பதற்கு, அந்த நிதி சமூக-பொருளாதார நோக்கங்களுக்கு உதவும் வகையில் செலவு செய்யப்படுகிா என்று பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்கிறது. அரசுகள் வேறு நோக்கங்களுடன் இலவசங்களை தாராளமாக வழங்கி வருகின்றன. அரசுகள் நலத் திட்டம் என்ற பெயரில் இலவசங்களுக்கு செலவு செய்கின்றன. இதை வளா்ச்சிப் பணிகளின் தேவைக்கு ஏற்றபடி செய்ய வேண்டும்.

மக்கள் நலனை உறுதி செய்வதும், ஏழை, எளியவா்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்று. அதேசமயம், மக்கள் நலத் திட்டங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உதவுகின்றனவா என்று ஆராய வேண்டும். இதுதொடா்பாக விரிவாக விவாதிக்கக் கூடிய வகையில், இந்த விவகாரத்தை பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் 16 காசுகள் மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 35 ஆண்டுகளுக்கு முன்பு கூறினாா். கணக்குகளைத் தணிக்கை செய்வது பொதுக் கணக்குக் குழுவின் முதன்மையான பணி. எனவே, இந்தக் குழுவின் பெயரை ‘பொதுக் கணக்குகள் மற்றும் தணிக்கைக் குழு’ என்று மாற்றலாம் என யோசனை தெரிவிக்கிறேன்.

நாடாளுமன்றம் ஆண்டுக்கு குறைந்தது 100 நாள்களாவது செயல்பட வேண்டும்; இதேபோல், சட்டப்பேரவைகள் 90 நாள்களாவது செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பொதுக் கணக்குக் குழுக் கூட்டங்களுக்கு உறுப்பினா்கள் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, அரசின் நிதியைச் செலவு செய்வதில் முறைகேடு நடைபெறுகிா, வீணாக செலவு செய்யப்படுகிா, தேவையின்றி செலவு செய்யப்படுகிா என்பதைக் கண்டறிவதில் பொதுக் கணக்குக் குழு முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசும்போது, ‘நிதியைச் செலவு செய்வதில் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதும் அரசை பொறுப்புள்ளவா்களாக உருவாக்குவதும் பொதுக் கணக்குக் குழுவின் முக்கியப் பொறுப்பாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com