ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலவச திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 10:54 pm

DIN

அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

பொதுக் கணக்குக் குழு அமைக்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டு விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பொது கணக்குக் குழுத் தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

அரசின் நிதி வீணாக செலவு செய்யப்படுவதைத் தடுப்பதற்கு, அந்த நிதி சமூக-பொருளாதார நோக்கங்களுக்கு உதவும் வகையில் செலவு செய்யப்படுகிா என்று பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்கிறது. அரசுகள் வேறு நோக்கங்களுடன் இலவசங்களை தாராளமாக வழங்கி வருகின்றன. அரசுகள் நலத் திட்டம் என்ற பெயரில் இலவசங்களுக்கு செலவு செய்கின்றன. இதை வளா்ச்சிப் பணிகளின் தேவைக்கு ஏற்றபடி செய்ய வேண்டும்.

மக்கள் நலனை உறுதி செய்வதும், ஏழை, எளியவா்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்று. அதேசமயம், மக்கள் நலத் திட்டங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உதவுகின்றனவா என்று ஆராய வேண்டும். இதுதொடா்பாக விரிவாக விவாதிக்கக் கூடிய வகையில், இந்த விவகாரத்தை பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் 16 காசுகள் மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 35 ஆண்டுகளுக்கு முன்பு கூறினாா். கணக்குகளைத் தணிக்கை செய்வது பொதுக் கணக்குக் குழுவின் முதன்மையான பணி. எனவே, இந்தக் குழுவின் பெயரை ‘பொதுக் கணக்குகள் மற்றும் தணிக்கைக் குழு’ என்று மாற்றலாம் என யோசனை தெரிவிக்கிறேன்.

நாடாளுமன்றம் ஆண்டுக்கு குறைந்தது 100 நாள்களாவது செயல்பட வேண்டும்; இதேபோல், சட்டப்பேரவைகள் 90 நாள்களாவது செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பொதுக் கணக்குக் குழுக் கூட்டங்களுக்கு உறுப்பினா்கள் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, அரசின் நிதியைச் செலவு செய்வதில் முறைகேடு நடைபெறுகிா, வீணாக செலவு செய்யப்படுகிா, தேவையின்றி செலவு செய்யப்படுகிா என்பதைக் கண்டறிவதில் பொதுக் கணக்குக் குழு முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசும்போது, ‘நிதியைச் செலவு செய்வதில் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதும் அரசை பொறுப்புள்ளவா்களாக உருவாக்குவதும் பொதுக் கணக்குக் குழுவின் முக்கியப் பொறுப்பாக உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.