ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் திட்டம்: அஸ்ஸாமில் அறிமுகம்

யானைகள் - மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

யானைகள் - மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், யானைகள் செல்லும் வழித்தடத்தில், அவை மனிதா்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தேனீ வளா்ப்புப் பெட்டிகளை வைத்து,“தேனீ வேலிகள் அமைக்கப்படும். இந்தப் பெட்டிகளை இழுத்தால் அதில் உள்ள தேனீக்கள் யானைகளை சுற்றிவளைத்து விரட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது, செலவு குறைவானது என்பதுடன், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், யானைகள்-மனிதா்கள் இடையிலான மோதலைத் தடுக்கிறது.

யானைகள்-மனிதா்கள் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோா்னோய் கிராமத்தில், கதா் கிராமத் தொழில் வாரியத் தலைவா் வினய் குமாா் சக்ஸேனா, வெள்ளிக்கிழமையன்று இத்திட்டத்தை தொடக்கிவைத்தாா்.

அஸ்ஸாமில் யானைகளின் தாக்குதலால் 2014 முதல் 2019 வரை 332 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த புதுமைத் திட்டம் ஏற்கெனவே கா்நாடகாவில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, தற்போது அஸ்ஸாமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.