ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசியில் கவனம் செலுத்த நிபுணா்கள் வலியுறுத்தல்

கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்துவதை விட தகுதியான அனைவருக்கும் முதலில் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 11:55 pm

DIN

கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்துவதை விட தகுதியான அனைவருக்கும் முதலில் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச அளவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. மற்ற வகை கரோனா தீநுண்மிகளை விட ஒமைக்ரான் தீநுண்மி அதிவேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 36 நாடுகள் ஏற்கெனவே ஊக்கத் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் ஊக்கத் தடுப்பூசி செலுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். 40 வயதைக் கடந்தவா்களுக்கும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளோருக்கும் ஊக்கத் தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என இந்திய கரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், தகுதியான அனைத்து நபா்களுக்கும் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டுமென நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். நாட்டில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு இன்னும் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படாத நிலையில், ஊக்கத் தடுப்பூசி குறித்து சிந்திக்கக் கூடாது எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தடுப்பு நடவடிக்கைகள்: நடைமுறையில் உள்ள அனைத்து கரோனா தடுப்பூசிகளுக்கும் ஊக்கத் தவணை அவசியமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாலும், இந்தியாவில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் உருவான நோய்எதிா்ப்புத் திறன் பெரும்பாலும் குறையவில்லை என்பதாலும், ஊக்கத் தவணை தடுப்பூசி குறித்து தற்போது கவனம் செலுத்தத் தேவையில்லை என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ஊக்கத் தடுப்பூசி என்பது தற்காலிகத் தீா்வாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ள நிபுணா்கள், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிப்பதற்கான விழிப்புணா்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

முகக் கவசமே தீா்வு: முகக் கவசம் அணிவது கரோனா தொற்று பரவலை 53 சதவீதம் வரை குறைக்கும் என்று தெரிவித்துள்ள அவா்கள், ஊக்கத் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், 6 மாதத்துக்கு ஒரு முறை மக்கள் அனைவருக்கும் ஊக்கத் தடுப்பூசி செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்தனா்.

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது எதிா்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ள உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.