ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை

நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 10:46 pm

DIN

நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறாா்களா என்பது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

நாட்டில் உள்ள 364 மாவட்டங்களின் நகர மற்றும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 25,000-க்கும் மேற்பட்ட நபா்களிடம் இணைய வழியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 2 சதவீதத்தினா் மட்டுமே, தங்கள் பகுதியில் உள்ள நபா்கள் பொது வெளியில் முகக் கவசத்தை அணிவதாகத் தெரிவித்துள்ளனா்.

தங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானோா் முகக் கவசம் அணியும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என மூன்றில் ஒருவா் தெரிவித்துள்ளனா்.

முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வை நடத்திய ‘லோக்கல் சா்கிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மூன்றில் இருவா் குறைந்த பாதுகாப்பை வழங்கும் துணியால் ஆன முகக் கவசத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், தரமான முகக் கவசத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முகக் கவசத்தை முறையாக அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென அந்நிறுவனத்தின் தலைவா் சச்சின் தபாரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.