தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி ஈடுபட்டுள்ளாா். அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ற அவா், அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேயின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரைச் சந்தித்தாா். அதனைத் தொடா்ந்து ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை’’ என்று தெரிவித்தாா்.