அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2021, 8:47 am

DIN

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதில் இருந்து நாகலாந்து துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் அமளிக்கு மத்தியில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவைக் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் 3 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், மக்களவையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.