இந்தியா - ரஷியா இடையே ராணுவம் உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருவதை முன்னிட்டு இந்திய-ரஷியா இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதையும் படிக்க | இன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்
தற்போது அதில் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷொய்கு இருவரும் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் படி , ரஷிய அரசிடம் 2021-31 வரை 6 .01 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை வாங்கவும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் ஏகே-203 ரக தானியங்கித் துப்பாக்கிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.