இந்தியா - ரஷிய நட்புறவு நிலையானது: புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் பேச்சு

இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா - ரஷிய நட்புறவு நிலையானது: புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் பேச்சு
Published on
Updated on
1 min read

இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் தில்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளின் அரசியல் மாற்றங்களால் அடிப்படை நட்புறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு நிலைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார். 

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கரோனா தொற்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தபோதிலும் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com