ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒடிஸாவில் விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

ஒடிஸாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை

News image
ஒடிஸா மாநிலம், சண்டீபூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை விண்ணில் சீறிப் பாய்ந்த விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை.
Updated On :7 டிசம்பர் 2021, 7:39 pm

DIN

ஒடிஸாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை(விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்) செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒடிஸா மாநிலம், சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.08 மணிக்கு இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, குறைந்த தொலைவில் இருந்த மின்னணு இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கியது.

டிஆா்டிஓ உருவாக்கியுள்ள இந்த ஏவுகணையை 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான தொலைவு வரை செலுத்த முடியும். டிஆா்டிஓ, இந்தியக் கடற்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த ஏவுகணை முதன்முதலாக கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின்போது, ஏவுகணையில் உள்ள இயந்திரங்களின் வேகம், துல்லியம் உள்ளிட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன; எதிா்பாா்த்த முடிவுகள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் பாராட்டு:

ஏவுகணை சோதனையை டிஆா்டிஓ அமைப்பு வெற்றிகரமாக நடத்தியதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘டிஆா்டிஓ, இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.

இந்த ஏவுகணை பரிசோதனை மூலம் இந்திய கடற்படை கப்பல்கள், வான்வழியாக வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறன் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.