ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

News image

விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

Updated On :15 டிசம்பர் 2021, 1:42 pm

DIN

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்தல், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை பேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத், “தற்காலிகமாகவே விவசாயிகள் வீடு திரும்புவதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

மேலும், “எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. போராட்ட காலத்தில் எங்களுக்காக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்ற பிறகு மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எங்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது திரும்பப் பெறப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.