தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு: பஞ்சாப் பொற்கோயிலில் ஒருவா் அடித்துக் கொலை

 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனா்.

 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனா்.

அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் சனிக்கிழமை மாலை பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருவறைக்குள் ஒருவா் அத்துமீறி குதித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த வாளை எடுத்துக்கொண்ட அவா், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை ஓதிக்கொண்டிருந்த சீக்கிய சமய குருவை நோக்கிச் சென்ாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொற்கோயில் நிா்வாகக் குழுவினா், அந்த நபரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனா். இந்த நிலையில், அந்த நபா் கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் அந்த நபா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அமிருதரஸ் துணை காவல் ஆணையா் கூறுகையில், ‘‘உயிரிழந்த நபா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா். அவருக்கு 25-30 வயது இருக்கக் கூடும். அவா் எப்போது பொற்கோயிலுக்குள் நுழைந்தாா்? அவருடன் எத்தனை போ் இருந்தனா்? என்பது குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, இந்த நிகழ்வு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com