மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மாநிலத்தில் 48 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிப்புக்குள்ளான 8 பேரில் 4 பேர் மும்பை விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்கள். அதில் ஒருவர் மும்பையைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஜல்கானைச் சேர்ந்தவர்.
இதையும் படிக்க | ஹிந்து யார், ஹிந்துத்வவாதி யார்? மோடியைக் குறிவைக்கும் ராகுல்
மற்ற இருவரில் ஒருவர் சத்தீஸ்கரையும் மற்றொருவர் கேரளத்தையும் சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுதவிர மற்ற இருவர்களில் ஒருவர் தன்சானியாவுக்கும் ஒருவர் பிரிட்டனும் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
மீதமுள்ள 4 பேரில் 3 பேர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை. இந்த மூவரும் உகாண்டாவிலிருந்துத் திரும்பியுள்ளனர். இவர்கள் சதாராவைச் சேர்ந்தவர்கள்.
மற்றொருவர் புணேவைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் சர்வதேச பயணி ஒருவருடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


