தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 145 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2021, 11:26 am


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் என்ஆர்ஐ ஒருவர் உள்பட இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இருவரும் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். என்ஆர்ஐ டிசம்பர் 15-ம் தேதி பிரிட்டனிலிருந்து ஆமதாபாத் விமானம் வந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவுடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவருடன் பயணித்தவர்கள் மற்றும் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட மற்றொரு 15 வயது சிறுவனும் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளார். இவர் காந்தி நகரைச் சேர்ந்தவர். 

இதன்மூலம், ஒமைக்ரான் வகை தொற்றால் நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.