மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு ஒமைக்ரான்

கேரளத்தில் மேலும் 29 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2021, 12:56 pm

DIN


கேரளத்தில் மேலும் 29 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருப்பதாவது:

"புதிதாக ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் எர்ணாகுளம் வந்தவர்கள். மேலும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் உறுதி செய்யப்பட்டவர்களில் 28 மற்றும் 24 வயதுடைய இருவர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். 35 வயதுடைய ஒருவர் அல்பேனியாவிலிருந்து திரும்பியவர். மற்றொருவர் நைஜீரியாவிலிருந்து வந்தவர்.

கோழிக்கோட்டில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து வந்துள்ளார்.

இதன்மூலம், கேரளத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் இருவருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எர்ணாகுளத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்கள் டிசம்பர் 15, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இங்கு வந்துள்ளனர். நைஜீரியாவிலிருந்து வந்தவர் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர். இவர் டிசம்பர் 14-ம் தேதி வந்துள்ளார். 4 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்த பிறகு அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உறுதி செய்யப்பட்டவர் டிசம்பர் 19-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கேரளம் திரும்பியுள்ளார்.

ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது."

கேரளத்தில் முதன்முறையாக பிரிட்டனிலிருந்து திரும்பிய ஒருவருக்கு கடந்த 12-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.