மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கிடையே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு அமைச்சரவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், பழங்குடிகள் நலத் துறை அமைச்சர் கே.சி. பாடவி ஆகியோருடன் பாஜக எம்.எல்.ஏ. சமீர் மகி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர், கரோனா தொடர்பாக லேசான அறிகுறி மட்டுமே உள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.