எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 12:17 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து வந்த குடும்பத்திற்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் லண்டனிலிருந்து மும்பை வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் இருவர் ஏற்கெனவே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதில் இருவருக்கு மட்டுமே லேசான கரோனா அறிகுறி  கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 167 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் மட்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 85 பேரில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மும்பையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 809 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.