அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு: சபரிமலை செல்வோருக்கு விலக்கு

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
சபரிமலை செல்வோருக்கு விலக்கு
Updated On :30 டிசம்பர் 2021, 2:37 am

DIN

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள கேரள அரசு, இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே மகரஜோதி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.