டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தீயில் சிக்கிய முதியவர்களை தோளில் சுமந்து வந்த தில்லி காவலர்; குவியும் பாராட்டு

தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பற்றிய தீயிலிருந்து முதிய தம்பதியைக் காப்பாற்றிய தில்லி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News image
தீயில் சிக்கிய முதியவர்களை தோளில் சுமந்து வந்த தில்லி காவலர்; குவியும் பாராட்டு
Updated On :8 பிப்ரவரி 2021, 10:36 am

DIN


புது தில்லி: தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பற்றிய தீயிலிருந்து முதிய தம்பதியைக் காப்பாற்றிய தில்லி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது, தீப்பற்றிய கட்டடம் மிகவும் உள்புறமாக இருந்ததும், அதன் முக்கிய நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக காவலர் விக்ரம், அருகிலிருந்த கடையில் சுத்தியை வாங்கி வந்து பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்தனர். புத்திசாலித்தகமான வீட்டுக்குச் செல்லும் எரிவாயு குழாய் இணைப்பைத் துண்டித்தனர்.

மாடி வழியாக வீட்டுக்குள் குதித்த காவலர்கள், வீட்டுக்குள் இருந்த முதிய தம்பதியை வெளியே அழைத்துவந்தனர். அதில், வயதான பெண்மணியை தலைமைக் காவலர் விக்ரம் தனது தோளில் சுமந்து கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார்.

இருவரையும் காப்பாற்றிய காவலர்கள், உடனடியாக அருகிலிருந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களையும் மீட்டு உயிர்ச்சேதத்தை தவிர்த்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.