கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்

சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

News image

பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்

Updated On :8 பிப்ரவரி 2021, 10:37 am

PTI


கிருஷ்ணகிரி: சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

Story image

பெங்களூருவில் தான் தங்கியிருந்த பண்ணை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலா, கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியாக கிருஷ்ணகிரியை காலை 10 மணிக்கு வந்தடைந்தார்.

கிருஷ்ணகிரி எல்லையில், அவருக்கு மேள, தாள வாத்தியங்கள் முழங்க, பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில் சசிகலாவின் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200  வாகனங்கள் புடை சூழ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறப் புடவையில் சசிகலா தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

Story image

அவர் வரும் வழியில், அவரது காரில் இருந்த அதிமுக கொடியை காவல்துறையினர் அகற்றியதால், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் ஏறி சசிகலா தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் அதிமுக மற்றும் அமமுக கொடிகளை கையில் ஏந்திய ஏராளமானோர் சசிகலாவை வரவேற்றனர். 

Story image

கிருஷ்ணகிரி மாவட்டமே இன்று விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலா பயணிக்கும் பாதை முழுக்க பேனர்களும், வரவேற்பு பலகைகளும், போஸ்டர்களும், அலங்கார வளைவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில், தலையில் கலசங்களுடன், பூங்கொத்து, பூமாலைகளுடன் ஏராளமான தொண்டர்கள் காத்திருப்பதையும் காண முடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.