குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த கார்களில் தீ விபத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்த போது 2 கார்களில் தீ விபத்து நேரிட்டது.

News image

சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த கார்களில் தீ விபத்து

Updated On :8 பிப்ரவரி 2021, 5:51 pm IST

கிருஷ்ணகிரி: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்த போது 2 கார்களில் தீ விபத்து நேரிட்டது.

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவின் வரவேற்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 

ஒருபுறம் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கிருஷ்ணகிரி  தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Story image

அங்கிருந்த தொண்டர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கார்களுக்கு அருகில் இருந்த கார்களை அப்புறப்படுத்தினர். இதனால் அருகிலுள்ள மற்ற கார்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சசிகலாவை வரவேற்க வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடிக்க அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பட்டாசுகள் ஏற்றப்பட்டிருந்த காரில், சாலையில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்து நேரிட்டதால், அருகருகே இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.