ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு (கோப்புப்படம்)
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு (கோப்புப்படம்)

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Published on

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாரோக் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைகளிலுள்ள இடிபாடுகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இப்பணிகள் முடிவடைந்து சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com