அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காங்கிரஸ் பிரிந்து குழப்பத்தில் இருக்கிறது: பிரதமர் மோடி

​பிரிந்து குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2021, 1:54 pm

DIN


பிரிந்து குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.

இதுபற்றி மக்களவையில் அவர் ஆற்றிய உரை:

"நாட்டை 60 ஆண்டு காலம் ஆண்ட மிகப் பழைய கட்சியான காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு திசையிலும் மக்களவை உறுப்பினர்கள் வேறு ஒரு திசையிலும் செயல்படுகின்றனர். இப்படி பிரிந்து குழம்பியிருக்கும் கட்சியால், அந்தக் கட்சிக்கும் எந்த நல்லதும் செய்ய முடியாது, நாட்டின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது. இதைவிட பெரிய துரதிருஷ்டம் எதுவும் இருக்க முடியாது.

மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் நிறைய உத்வேகத்துடன் விவாதிப்பார்கள், கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். மறுபுறம், மக்களவையில் ஒரு காங்கிரஸ் பிரிவு இருக்கிறது.

திட்டம் தீட்டி வியூகம் வகுத்து அவையை சீர்குலைக்க நினைக்கின்றனர். மக்கள் காணும் உண்மையை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுபோன்ற வியூகங்களால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது" என்றார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.