தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயிகளுக்கு ஆதரவு: பேரவைக்கு டிராக்டரில் வந்த எம்.எல்.ஏ.

பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டிராக்டரில் வருகை புரிந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

News image

விவசாயிகளுக்கு ஆதரவு: பேரவைக்கு டிராக்டரில் வந்த எம்.எல்.ஏ.

Updated On :10 பிப்ரவரி 2021, 8:03 am

DIN

பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டிராக்டரில் வருகை புரிந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 75 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினரான இந்திர மீனா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவைக்கு டிராக்டரில் வந்தார்.

ஜெய்ப்பூரிலிருந்து விவசாயிகளுடன் டிராக்டரை ஓட்டிக்கொண்டே சட்டப் பேரவைக்கு வருகை புரிந்தார். தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் இதனைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.