ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி.யில் 6,7,8-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
உ.பி.யில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு அளித்த தளர்வுகளுக்கேற்ப திறக்கப்பட்டு வருகிறது.

கரோனா விகிதம் குறைந்து வருவதற்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறந்து வருகின்றன.

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் செயல்படத்தொடங்கியுள்ளன.

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.