உலக வானொலி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

உலக வானொலி நாளை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உலக வானொலி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
உலக வானொலி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி: உலக வானொலி நாளை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்று உலக வானொலி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான சுட்டுரை செய்தியில், “ இனிய உலக வானொலி நாள் வாழ்த்துகள்! அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்துகள், புதுமையான படைப்புகள் மற்றும் இசையால் வானொலியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓர் அருமையான ஊடகமாகும்.

தனிப்பட்ட முறையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நேர்மறை தாக்கத்தை நான் உணர்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com