ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

குஜராத் டைல்ஸ் தொழிற்சாலையில் விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

குஜராத்தின் மோர்பியில் உள்ள டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. 

News image

Gujarat: Death toll in tile factory mishap rises to three

Updated On :13 பிப்ரவரி 2021, 6:50 am

PTI

குஜராத்தின் மோர்பியில் உள்ள டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. 

மோர்பி மாவட்டத்தின் ரங்க்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை பீங்கான் களிமண் கொண்ட ஆறு முதல் ஏழு குழிகள் சரிந்து விழுந்தன.

இந்த விபத்தில் சிக்கிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்துக்குப் பின்னர் காணாமல் போன ஒரு பெண் தொழிலாளியின் சடலம் 30 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி ஹிடேஷ் தேவ் தெரிவித்தார்.

இறந்த பெண் சோனம்பென் புராபியா என அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டைல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 60 டன் களிமண்ணைக் கொண்ட குழிகள் சரிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.