அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்

கேரளத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோ கெமிக்கல் திட்டம் மற்றும் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி  தொடக்கி வைத்தார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி  
Updated On :14 பிப்ரவரி 2021, 11:59 am

DIN

கேரளத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோ கெமிக்கல் திட்டம் மற்றும் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி  தொடக்கி வைத்தார்.

சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து கொச்சி சென்ற பிரதமர் அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

பிரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,700 கோடி முதல் ரூ. 4,000 கோடி வரை அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

ரூ.6,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.

கொச்சி துறைமுகத்தில் சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.

எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையம் இந்தியாவின் முதலாவது முழு சர்வதேச கப்பல் முனையமாகும்.

நவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த சகாரிகா சர்வதேச கப்பல் முனையம் ரூ.25.72 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.