அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன.

News image
அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
Updated On :18 பிப்ரவரி 2021, 9:02 am

DIN


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன.

சுகாதாரத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் இதுப ற்றி கூறுகையில், மாநிலத்தில் மீண்டும் கரோனா அலை எழாமல் தடுக்க கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதிக கரோனா நோயாளிகள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் நடைமுறை கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்தது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் கர்நாடகத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.