சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் உ.பி. பெண்

சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால் அவரைத் தூக்கிலிடும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் உ.பி. பெண்
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் உ.பி. பெண்

சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால் அவரைத் தூக்கிலிடும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மதுராவைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர்தான் முதல் முறையாக சுதந்திர இந்தியாவின் தூக்கிலிடும் அறையை ஒரு மரண தண்டனைக் கைதியாக எதிர்கொள்ளவிருக்கும் பெண். 

தூக்கு தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு இவர் செய்த குற்றம் என்ன? தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொன்று குவித்தார் என்பதே இவர் மீதான குற்றம்.

பவன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்த ஷௌகத் அலியின் மகள்தான் ஷப்னம். முதநிலை பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் காவல்துறையிடம் கூறினார்.

ஆனால் உண்மையை அவ்வளவு எளிதில் மறைக்க முடியவில்லை. காவல்துறையின் விசாரணையில், இந்த கொலையில், ஷப்னம் மற்றும் அவரது காதலன் சலீமும் ஈடுபட்டது தெரிய வந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும்  உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கழுத்தறுத்துக் கொன்றுகுவித்துள்ளார். தனது வீட்டிலிருந்த மிகச் சிறிய குழந்தையை கூட ஷப்னம் விட்டுவைக்கவில்லை.  10 மாதக் குழந்தையையும் கொன்றுள்ளார்.

இந்த வழக்கில் சலீம் மற்றும் ஷப்னம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்தது. அவர்களது தொடர் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டு, 2015-ஆம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்தியாவிலேயே பெண்களை தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த சிறைக் கூடத்தில் 1998 ஏப்ரல் 6-ஆம் தேதி லக்னௌச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்பவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறைக்கூடத்துக்கு, நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட்ட பவான் ஜல்லாத் அவ்வப்போது வந்து, சிறைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சிறைத் துறைக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இது குறித்து மதுராசிறைக் கூட காவல் கண்காணிப்பாளர் ஹைலேந்திர குமார் கூறுகையில், ஷப்னத்தை தூக்கிலிடும் தேதி இறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதும் அவர் தூக்கிலிடப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com