அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழகத்தின் பங்களிப்பு குறித்து நாடே பெருமை கொள்கிறது: மோடி தமிழில் ட்வீட்

​தேச வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 பிப்ரவரி 2021, 4:25 pm

DIN


தேச வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளை (வியாழக்கிழமை) கோவைக்கு வரவுள்ள நிலையில், அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்:

"தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.   தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்."

அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை மற்றும் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை வருகிறார். 

கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மின்வாரியம், மத்திய கப்பல் போக்குவரத்து, குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும், முடிக்கப்பட்ட பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
 பின்னர் மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். 

இதில் பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டம் முடிந்ததும் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.