பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை; அதிகரிக்கும் குளிர்

தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

News image
தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை; அதிகரிக்கும் குளிர்
Updated On :2 ஜனவரி 2021, 5:51 am

DIN

தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 

அதன்படி தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.2) காலை முதலே பரவலாக மழை பெய்தது. மேலும், ரிவாரி, பிவாடி, மனேசார், குருகிராம், ஃபருக் நகர், சோனிபட், பானிபட், கர்னால், ஷாம்லி, நர்வானா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

ஏற்கனவே பனிமூட்டம் காரணமாக தலைநகரில் கடும் குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது மழையால் மேலும் குளிர் அதிகரித்துள்ளது.

பனிமூட்டத்தால் தில்லி காஸிப்பூர் எல்லையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாலை 5.30 மணி முதல் காலை 5.30 மணி வரை கடும் பனி காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.