

புது தில்லி: ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இதனை இரண்டு அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
அதன்படி ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.