இந்தியாவில் மேலும் 20 பேருக்கு புதிய வகை கரோனா

இந்தியாவில் மேலும் 20 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியாவில் மேலும் 20 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணம் மேற்கொண்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,96,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் புதிதாக 16,375 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 12,917 குறைந்து 2,31,036 ஆக உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com