எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் 4-வது நாளாக தொடர் மழை

தில்லியின் பல்வேறு நகரங்களில்  நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
தில்லியில் 4-வது நாளாக தொடர் மழை
Updated On :6 ஜனவரி 2021, 6:49 am

DIN

தில்லியின் பல்வேறு நகரங்களில்  நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை அவ்வபோது பெய்து வருகிறது.

தென்மேற்கு தில்லி, வடகிழக்கு தில்லி, மத்திய தில்லி, மானேசர், குருகிராம், பானிபட், ஃபருக் நகர், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அதிகபட்சமாக சப்தர்ஜங் பகுதியில் 4.77 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏற்கனவே தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தில்லி எல்லைகளில் உள்ள சாலைகளில் கூடாரங்களை அமைத்து போராடி வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.