மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தில்லி அரசு முடிவு
கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.


கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கையால் தற்போது கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுகளின் படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்குள் பாடம் உள்பட செய்முறைத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதவும், அதற்காக பயிற்சி எடுக்கவும் வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இறுதியாக இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...