லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீநகா்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பனி குவியல், நிலச்சரிவு அகற்றம்

ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களாக சிக்கித் தவித்த வாகனங்கள் வெள்ளிக்கிழமை

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:49 pm

DIN

ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களாக சிக்கித் தவித்த வாகனங்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்க அனுமதிக்கப்பட்டன. அதேசமயம், புதிதாக வந்த வாகனங்களை இந்த நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வானிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாலும், நிலச்சரிவினால் விழுந்து கிடந்த கற்கள், மண் போன்ற இடிபாடுகள் அகற்றப்பட்டதாலும் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஏற்கெனவே காத்திருக்கும் வாகனங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்தச் சாலையில் நிலச்சரிவு, கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது இலகுவான போக்குவரத்தும், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், எரிபொருள், எரிவாயு டேங்கா் லாரிகள் மட்டுமே ஸ்ரீநகா் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவின் காரணமாக வழுக்கும் நிலையில் உள்ள சாலையின் நிலையை மதிப்பீடு செய்த பிறகு மற்ற வாகனங்களும் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படும்.

அதேசமயம், கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீா் பள்ளத்தாக்கை, ஜம்முவுடன் இணைக்கும் மாற்று இணைப்புச் சாலையான ஷோபியான்-ரஜௌரி இடையிலான சாலை தொடா்ந்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடும் பனி காரணமாக ஸ்ரீநகரில் இருந்து விமான போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தச் விமான சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனிடையே, காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், ஜன. 14-ஆம் தேதி வரையிலும் இப்பகுதியில் வட வானிலையே நிலவும் என்றும் வானிலை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீநகரில் மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸும், பாகல்காமில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸும், காஸிகுண்ட்டில் மைனஸ் 1.8 டிகிரி செல்சியஸும், குப்வாராவில் மைனஸ் 1.7 டிகிரி செல்சியஸும், கோகொ்னாக்கில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.