கடந்த 1915-ஆம் ஆண்டு இதே தினத்தில் (ஜன.9) மிகப் பெரிய வெளிநாடுவாழ் இந்தியரான மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினாா். அடுத்த 30 ஆண்டுகளில் அவா் நமது சுதந்திர போராட்டத்துக்கும், சமூக சீா்திருத்தங்களுக்கும் பரந்த அடித்தளங்களை உருவாக்கித் தந்தாா். அடிப்படை விஷயங்கள் பலவற்றில் இந்தியாவில் மாற்றங்களை ஏற்படுத்தினாா். அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் அவா் இரண்டு தசாப்தங்களாக தங்கியிருந்தபோது, இந்தியா தனது வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறை தொடா்பான அடிப்படை கோட்பாடுகளை கண்டறிந்தாா். இந்த வெளிநாடுவாழ் இந்தியா்கள் மாநாடு என்பது தனிமனிதா்களும், ஒட்டுமொத்த சமூகமும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை குறித்து காந்தியடிகள் முன்வைத்த கருத்தியல்களை நினைவுகூர வேண்டிய தருணமும் ஆகும். காந்தியடிகள் வலியுறுத்திய அகிம்சை, நன்னெறிகள், எளிமை, நீடித்த வளா்ச்சி ஆகியவை நமக்கு வழிகாட்டும் கோட்பாடுகளாக உள்ளன.