பலனடைந்தவா்கள் கவலையடைய வேண்டாம்: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் விவசாயிகள் ஒருபுறம் இருந்தாலும், அந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள விவசாயிகளின் நலன், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீா்ப்புக்குப் பிறகு காக்கப்படுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘புதிய வேளாண் சட்டங்களால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். அந்த விவசாயிகள் நீதிமன்றத்தின் தற்போதைய தீா்ப்பை எண்ணி கவலையடைய வேண்டாம். தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக புதிய சட்டங்களின்படி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்’ என்றாா் அவா்.