தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற தயக்கம் ஏன்? பஞ்சாப் முதல்வர் கேள்வி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு தயங்குவது ஏன் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
Updated On :23 ஜனவரி 2021, 10:53 am

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு தயங்குவது ஏன் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 60 நாள்களாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக  மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். 

“வேளாண் பட்டியல் மாநில அரசின் பட்டியலின்கீழ் வரும்நிலையில் மத்திய அரசு இதில் தலையிடுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஏன் தயங்குகிறது? இது மனிதாபிமானமற்றது” என அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.