தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடாளுமன்றம் நோக்கி பிப்.1-இல் விவசாயிகள் பேரணி

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக தில்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

News image
டிராக்டர் பேரணிக்கான தயார் நிலையில் டிராக்டர்கள்
Updated On :25 ஜனவரி 2021, 2:24 pm

DIN


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக தில்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று தில்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் (பிப்ரவரி 1) நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கு எல்லையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கிராந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் இதுகுறித்து பேசியது:

"பிப்ரவரி 1-ம் தேதி பல்வேறு பகுதிகளிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டம் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குட்பட்டதாக அல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் போராட்டம் என்பதையும் எங்களது பலத்தையும் நாளைய டிராக்டர் பேரணி அரசுக்கு உணர்த்தும். 

டிராக்டர் பேரணிக்கு வந்தவர்கள் திரும்பப் போகமாட்டார்கள். போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

அனைத்துப் போராட்டங்களும் பேரணிகளும் அமைதி வழியிலேயே நடைபெறும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.