சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்கத் தயார்: பிரதமர்

நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
நாடாளுமன்ற வாயிலில் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி
Updated On :29 ஜனவரி 2021, 6:24 am

DIN


நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன. 29) தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும் என்று கூறினார்.

பிரச்னைகள் குறித்த அனைத்து கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தெரிந்துகொள்ளத் தயார் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.